பழநி: பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.58 கோடி கிடைத்தது.
பழநி முருகன் கோயிலில் உண்டியல் நேற்று (நவ.30) எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 1.383 கிலோ தங்கம், 12.992 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 58 லட்சத்து 37ஆயிரத்து 372, மற்றும் 406 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.