Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் திருப்பதி மாடல்; ... சிவனாக காட்சியளித்த சாஸ்தா; வேத பாராயணத்துடன் வழிபாடு சிவனாக காட்சியளித்த சாஸ்தா; வேத ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
புனிதமான சபரிமலை 18 படிகளில் மேற்கூரை: தானாக வழக்குப் பதிவு செய்தது கேரள உயர்நீதிமன்றம்
எழுத்தின் அளவு:
புனிதமான சபரிமலை 18 படிகளில் மேற்கூரை: தானாக வழக்குப் பதிவு செய்தது கேரள உயர்நீதிமன்றம்

பதிவு செய்த நாள்

08 டிச
2023
08:12

சபரிமலை; சபரிமலையில் 18 படிகளின் மேற்பகுதியில் தானியங்கி மேற்கூரை அமைக்கும் விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.

சபரிமலையில் மிகவும் புனிதமாக கருதப்படுவது 18 படிகள். இருமுடி கட்டுடன் வருபவர்கள் மட்டுமே இந்த படிகளில் ஏறிச் சென்று ஐயப்பனை வழிபட முடியும். மண்டல மகர விளக்கு காலம் தவிர்த்து எல்லா மாத பூஜை நாட்களிலும் இந்த படிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இது சபரிமலையில் மிக அதிக கட்டணம் உடைய வழிபாடாகும். மழை நேரத்தில் படிபூஜை செய்வதில் பல சிரமங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு படியின் மேற்பகுதியில் தானியங்கி மேற்கூரை அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்தது. இதற்காக சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட கற்சுவர் சபரிமலை கோயிலின் அழகை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதை அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டது. பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து வரும் 19ஆம் தேதி வழக்கு விசாரணை மாற்றி வைத்து நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், ஜி.கிரீஷ் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதுபோல சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கும்படி பத்தனம்திட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்போது வரும் பக்தர் கூட்டத்தில் 20 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேவசம்போர்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது. நிலக்கல்லில் பாஸ்டேக் மூலம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் போது மின்சாரம் தடை பட்டால் அது செயல்படாமல் இருப்பது பற்றி கவலை தெரிவித்த நீதிபதிகள் இதை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar