Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராமர் கோயிலில் சிறப்பு பூஜை; ... திருப்பதி தர்மகிரியில் வால்மீகி ராமாயணம் முழுமையாக பாராயணம் திருப்பதி தர்மகிரியில் வால்மீகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவிலில் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவிலில் தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

22 ஜன
2024
04:01

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புனரமைப்பு செய்த தேர் வெள்ளோட்டம் நடந்தது. நாளை தைப்பூச கொடியேற்றம் நடைபெற உள்ளது.

மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றின் கரையில், மிகவும் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது. 2012ம் ஆண்டிலிருந்து கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றதால், தைப்பூச தேரோட்டம் நடைபெறவில்லை. கடைசியாக, 2011ம் ஆண்டு தைப்பூச தேரோட்டம் நடந்தது. 2022ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல், ஒரே இடத்தில் தேர் நிறுத்தி இருந்ததால், தேர் சக்கரங்கள் பழுதடைந்தன. இதனால் கடந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை. உபயதாரர்களின் நிதி உதவியோடு, 10 லட்சம் ரூபாய் செலவில், நான்கு சக்கரங்கள், இரண்டு சட்டங்கள் புதிதாக செய்து, தேரில் பொருத்தப்பட்டது. புனரமைப்பு செய்த தேர் வெள்ளோட்டம் நடந்தது. சிறப்பு பூஜையில், அலங்காரம் செய்த கும்பத்தை, புதிய தேரின் மீது வைத்தனர். பின்பு தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், வடம் பிடித்து, தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். இதில் ஹிந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் ரமேஷ், உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, பரம்பரை அறங்காவலர் வசந்தா, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தீயணைப்பு அலுவலர் பாலசுந்தரம் உள்பட முக்கிய அதிகாரிகள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

நாளை கொடியேற்றம். இந்த ஆண்டு தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளதை அடுத்து, நாளை (23ம் தேதி) காலை, 11:00 மணிக்கு கொடியேற்றமும், 24ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது. 25ம் தேதி பிற்பகல், 12:15 மணிக்கு அலங்காரம் செய்த தேருக்கு, வள்ளி, தெய்வானை சமேதராக, சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளுகிறார். தேரோட்டம், 12 ஆண்டுகளுக்கு பிறகு, அன்று மாலை, 3:15 மணிக்கு நடைபெற உள்ளது. 27ம் தேதி காலை மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar