Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகம் எப்போதும் பக்தியின் மண்: ... கம்பஹரேஸ்வரர் கோவிலில்1008 பரத கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கம்பஹரேஸ்வரர் கோவிலில்1008 பரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமபிரானுக்கு இணை அவரே; பேரூராதினம் புகழாரம்
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமபிரானுக்கு இணை அவரே; பேரூராதினம் புகழாரம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2024
10:01

கோவை:அயோத்தி ராமபிரானுக்கு இணையாக, வேறு எந்த தெய்வமுமில்லை. அவருக்கு இணை அவரே, என்று கோவை பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை வைபவத்தில் பங்கேற்ற அவர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி: ராமர் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தி நகரே, தெய்வீகத்தன்மை வாய்ந்த நகரமாக இருந்ததை பார்க்கவும், உணரவும் முடிந்தது. நம் தேசத்தில், 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அனைவரும், எப்படியும் ராமர்கோவில் அமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடனும், கனவுடனும் வாழ்ந்து மறைந்தனர். அந்த புண்ணிய ஆத்மாக்களின் கனவும், தற்போதுள்ள பக்தர்களின் நம்பிக்கையும் நிறைவேறி உள்ளது, மனமகிழ்வை தருகிறது.

குஜராத்தில் உள்ள சுவாமி நாராயணன், பஞ்சாபில் உள்ள பொற்கோவில், ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி, கேரளாவில் உள்ள குருவாயூர், பத்மநாபசுவாமி என்று நம் நாட்டில் ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புகழ் இருக்கும். ஆனால் அயோத்தியில் அமைந்துள்ள ராமபிரானுக்கு இணையாக, வேறு எந்த தெய்வமுமில்லை; வேறு கோவிலுமில்லை. அவருக்கு இணை அவரே. அந்த அளவுக்கு நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பழமை மாறாமல் கோவிலை அமைத்துள்ளனர். நம் நாட்டின் மிகப்பெரிய அடையாளமாக அயோத்தி ராமர் கோவில் திகழும். இவ்வளவு ஆண்டுகளுக்கு பின், அமைக்கப்பட்ட ராமர் கோவிலில் பல கோடிக்கணக்கான மக்களின் உழைப்பு இருப்பதால், அந்த கோவிலில் தெய்வீகம் என்ற உயிர்ப்பு உள்ளது. இவ்வாறு, சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar