Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் பூப்பல்லக்கில் ... வல்லபை ஐயப்பன் கோயிலில் அரசு பொது தேர்வு மாணவர்களுக்காக சிறப்பு பூஜை வல்லபை ஐயப்பன் கோயிலில் அரசு பொது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 பிப்
2024
11:02

பழநி; பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நேற்று (பிப்.28)ல் தேரோட்டம் நடைபெற்றது.

பழநி, கோயில் நிர்வாகத்தின் உபகோயிலான மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்,.9ல் மூகூர்த்தகால் நடப்பட்டு துவங்கியது. பிப்.,13,ல் கோயில் முன் கம்பம் நட்டனர். பிப்.,20 கொடியேற்றம் நடைபெற்று, கோயில் முன் வைக்கப்பட்ட கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. பக்தர்கள், கம்பத்திற்கு பால், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பிப்.21ல் அடிவாரம், குமாரசத்திரம் அழகு நாச்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தங்க குதிரை, புதுச்சேரி சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி ரிஷபம், வெள்ளி யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பட்டு நடைபெற்று வருகிறது. பிப்.,27 மாலை 4:30 மணிக்கு பொட்டும், காரையும் கொண்டு வருதல் நடந்து, மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. (பிப்.,28 ல்) நேற்று காலை பாதிரி பிள்ளையார் அம்மன் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. திருத்தேரில் மாரியம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4:27 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு, திருத்தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் பக்தர்களின் ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் நடந்தது. கோயில் யானை கஸ்தூரி தேர் பின்னே ஒய்யாரமாய் நடந்து வந்தது. மாலை 5:58 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இரவு வண்டி கால் பார்த்தல், சக்தி கரகம், திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நிகழ்வுகள் நடைபெறறன. இன்று (பிப்.,29 ) கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது. தேரோட்டத்தில் கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில மூலஸ்தான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு ஆவணி மாத வளர்பிறை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கடைசி ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.ஸ்ரீ பாஞ்சராத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar