Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ... பழனியில் உலக முருக பக்தர்கள் மாநாடு பழனியில் உலக முருக பக்தர்கள் மாநாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா; தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா; தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 பிப்
2024
12:02

மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான இக்கோவிலில்  சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம், தல விருட்சம்  அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. இது நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திர திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இந்திர பெருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகன், பிரம்ம வித்யாம்பிகை சமேத  சுவேவேதாரனேஸ்வரர்  சுவாமிகள் தனி தனி தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தேரின் முன்பு கூடிய திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  மாலை தேர் நிலையை வந்து அடையும். இந்த தேரோட்ட விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மார்ச் 3ஆம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar