பதிவு செய்த நாள்
11
மார்
2024
05:03
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம் என்றே சொல்ல வேண்டும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களைப் பார்ப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகலும். தொழிலை விருத்தி செய்வீர்கள். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு லாபத்தை வழங்கிட இருப்பதால் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நட்புகளாலும் வாழ்க்கைத் துணையாலும் ஆதாயம் அடைவீர்கள். அதே நேரத்தில் நான்காமிட கேதுவால் அலைச்சலும் அதிகரிக்கும். எந்த நிலை ஏற்பட்டாலும் சோர்வடையாமல் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். மற்றவர்களால் சாதிக்க முடியாத செயல்களை நீங்கள் சாதித்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இதுவரை சந்தித்து வந்த சங்கடங்கள் விலகும். பணியாளர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பேறுக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். சிலருக்கு புதிய வேலை அமையும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாகும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப். 3,4.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,18,23,27, ஏப்.5,9,
பரிகாரம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட அல்லல் தீரும்.
திருவாதிரை; புத்தி காரகனான புதன், யோக காரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் ராசிக்குள் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது அதற்குரிய அனுமதி கிடைக்கும். பத்தாம் இடத்தில் ராஜ கிரகமான சூரியனும் சஞ்சரிப்பதால் புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். முதலீட்டில் ஆதாயம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். பணியாளர்களின் நிலை உயரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். திருமணம் குழந்தை போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். குலதெய்வ அருள் ஏற்படும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 4,5.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,22,23,31, ஏப். 13
பரிகாரம்: துர்கையை வழிபட விருப்பம் அனைத்தும் நிறைவேறும்.
புனர்பூசம் 1,2,3 ம் பாதம்; அறிவுக்காரகன் குரு, கல்விக்காரகன் புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் உங்கள் நட்சத்திரநாதன் குருபகவானே யோகப் பலன்களை வழங்க இருக்கிறார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதன்படி அவர் பார்க்கும் மூன்று, ஐந்து, ஏழாம் இடங்கள் எல்லாம் உங்களுக்கு யோகத்தை வழங்க உள்ளது. அதற்குமேல் அவர் சஞ்சரிக்கும் லாப ஸ்தானமும் உங்களுக்கு வரவுகளை அதிகரித்திடச் செய்யும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உங்களைவிட்டு இனி விலக ஆரம்பிக்கும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வாழ்க்கைத் துணையால் அனுகூலம் உண்டாகும். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். புதிய இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவீர்கள். செய்யும் தொழிலை விரிவு செய்வீர்கள். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். மனதில் நிம்மதி ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் யோகத்தை உண்டாக்கும். பெண்கள் வாழ்க்கையில் இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். முயற்சிகள் வெற்றியாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப்.5,6.
அதிர்ஷ்ட நாள்: மார்ச்.21,23,30,ஏப்.3,12,
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு முல்லைப்பூ சாத்தி வழிபட வாழ்வு வளமாகும்.