Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : பங்குனி ராசி பலன் துலாம் : பங்குனி ராசி பலன் துலாம் : பங்குனி ராசி பலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கன்னி : பங்குனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
கன்னி : பங்குனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 மார்
2024
05:03

உத்திரம் 2,3,4 ம் பாதம்: ஆற்றல் காரகனான சூரியன், வித்யா காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தங்கள் முழுமையாக தெரிந்திருக்கும். எப்படி வாழவேண்டும் என்பதையும் நன்றாக அறிந்திருப்பீர்கள். பங்குனி மாதத்தை உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் நட்சத்திரநாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் செயலில் வேகம் இருக்கும். சத்ரு ஸ்தானத்தில் உண்டாகியுள்ள சனி, செவ்வாய் சேர்க்கையால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறப் போகிறது. முயற்சிகளில் முழுமையான பலன் கிடைக்கப் போகிறது. இதுவரையில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகப் போகிறது. சிலருக்கு சொத்து சேர்க்கையும் ஏற்படும். உடலில் இருந்த பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு நெருக்கடி உண்டாக்கிய போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பெண்களுக்கு விருப்பம் பூர்த்தியாகும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய சொத்து வாங்கக்கூடும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுயதொழில் செய்து வருபவர்கள் முன்னேற்றம் காண்பர்.  விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: மார்ச் 14,15, ஏப்.11
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 23, 28, ஏப்.1,5,10
பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டால் குறைகள் யாவும் தீரும்.

அஸ்தம்: அறிவுக்காரகன் புதன், மனக்காரகன் சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வீர்கள். அதில் எந்தவிதமான தடையும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வீர்கள். இந்தமாதம் குரு பகவானின் பார்வைகள் குடும்ப ஸ்தானத்திற்கும் சுக ஸ்தானத்திற்கும் உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசைகள் பூர்த்தியாகும். ஆறாமிடத்தில் ஏற்பட்டுள்ள சனி, செவ்வாய் சுக்கிரன் கூட்டணியால் உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். இதுவரையில் தடைபட்ட முயற்சி ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். இடமாற்றம், பதவி உயர்விற்காக காத்திருந்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக மாறும். காவல்துறையினருக்கு செல்வாக்கு உயரும். குடும்பம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்த நெருக்கடி விலகி ஆதாயம் ஏற்படும். அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். தலைமையிடம் நற்பெயர் ஏற்படும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். நெருக்கடிகளும் விலகும். பெண்கள் புதிய நட்புகளிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஜென்ம கேது, ஏழாம் இடத்தில் ராகுவால் தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு நெருக்கடிக்கு ஆளாகலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவதால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 15,16, ஏப்.12.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,20,23,29, ஏப். 2,5,11.
பரிகாரம் சிவபெருமானை வழிபட சிரமம் படிப்படியாக விலகும்.

சித்திரை 1,2 ம் பாதம்: அறிவுக்காரகன், வித்தைக்காரகனான புதன், பூமிகாரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு வேகம் இருக்கின்ற அளவிற்கு விவேகமும் இருக்கும். எந்த இடத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்தவர்கள் நீங்கள். உங்கள் நட்சத்திரநாதன், ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானுடன் இணைவதால் செயலில் வேகமும் நிதானமும் கலந்திருக்கும். நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரையில் தாமதமான சுபகாரியங்கள் நடைபெற ஆரம்பிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் செயல்களில் ஆதாயம் தோன்றும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொழில், பூமி, வேலை சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இல்லையெனில் வீண் சங்கடங்கள் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு யோகமான மாதமாக இருக்கும். காவல்துறையினருக்கு எதிர்பார்த்த பலன் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் குறையும். மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை அமையும். தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். விவசாயிகளுக்கு இந்த மாதம் அமோகமாக இருக்கும். வருமானம் நிறையும். மாணவர்கள் கவனத்தை படிப்பில் மட்டும் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 16,17, ஏப். 13
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,18,23,27, ஏப். 5,9
பரிகாரம்: மூகாம்பிகையை மனதில் தியானிக்க முயற்சி வெற்றி பெறும்.

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar