Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்காசி கோயிலில் கும்பாபிஷேகம் ... தூத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென் திருபுவனம் சிவன் கோயில் கல்வெட்டுக்களில் அரிய தகவல்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2012
11:10

பேட்டை:தென் திருபுவனம் புஷ்பவனநாதர் கோயில் கல்வெட்டுக்களில் அரிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தொல்லியல் ஆய்வில் தெரியவந்தது. முக்கூடல் அருகே தென் திருபுவனம் புஷ்பவனநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களை மதுரை தொல்லியல் துறை அலுவலர் வேதாசலம் ஆய்வு செய்தார். கல்வெட்டில் அரிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்தது.முள்ளிநாடு என்ற பண்டைய நாட்டுப்பிரிவில் இருந்த ஊர் தென் திருப்புவனம். இந்த ஊருக்கு சுந்தரபாண்டியநல்லூர் என்ற பெயரும் இருந்தது. கி.பி.12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சடையவர்மன் ஸ்ரீவல்லபன் காலத்தில் (கி.பி.1101ல்) கற்கோவிலாக இக்கோவில் உருவானது. இடைக்கால பாண்டியர் கால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோவில் உள்ளது.இங்கு பாண்டிய மன்னர், உதயமார்த்தண்ட மன்னர் காலத்து கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள இறைவன் தெள்நீர் வண்ணமுடைய மகாதேவர், அன்னை திருப்பூவின்தேவி நாச்சியார் என முற்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளனர். பழங்காலத்தில் இந்த ஊர் தென் திருப்பூவனம் என குறிப்பிடப்பட்டது. பாண்டிய நாட்டு வடபகுதியில் உள்ள திருப்பூவனத்திற்கு இணையாக தென்பாண்டி நாட்டில் உள்ள இத்தலம் தென் திருப்பூவனம் என அழைக்கப்பட்டுள்ளது என கல்வெட்டுக்களில் இருந்து அறிய முடிகிறது என தொல்லியல் துறை அலுவலர் வேதாசலம் தெரிவித்தார்.இதுதொடர்பான தகவல் விபரக்குறிப்புக்களை வேதாசலம் அப்பகுதி மக்களிடம் அளித்தார். ஏற்பாடுகளை சுற்றுலாக்குழு பாரதி, தானம் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar