போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 04:05
போடி; போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு தங்க கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடந்தது. போடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். முருகன், வள்ளி, தெய்வானைக்கு தங்க கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. காவடி, பால்குடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர்.