பதிவு செய்த நாள்
05
ஜூலை
2024
04:07
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா கம்பம் நடப்பட்டு முதல் வாரம் வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் தண்ணீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக்கோயில் ஆனித்திருவிழா ஜூலை 8 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஜூலை 16 மா விளக்கு, ஜூலை 17 ல் அக்னிசட்டி, ஜூலை 23 ல் மறுபூஜை நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு ஜூலை 2 ல் கம்பம் நடப்பட்டது. கம்பத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஏராளமானோர் குடம், செம்பில் தண்ணீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இன்று கம்பம் நடப்பட்டு முதல் வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் ஆனி மாதம் அமாவாசை என்பதால் கோயிலிலுக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றுங்கள்: திருவிழா முடியும் வரை ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆக்கிரமிப்பு காரணமாக ஒருவரையொருவர் இடித்துத் கொண்டு, இடைஞ்சலில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம், டி.எஸ்.பி., சூரக்குமாரன் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும்.