Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரகோட்டத்தில் திருக்கல்யாணம் ... திருப்பரங்குன்றத்தில் சாந்தாபிஷேகம்: புஷ்ப அலங்காரத்தில் சுவாமி! திருப்பரங்குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வயலூரில் கந்தசஷ்டி திருவிழா: திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 நவ
2012
11:11

திருச்சி: திருவண்ணாமலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்ய முயன்ற அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, "வயலூருக்கு வா என்று அழைத்த முருகன், அவரது நாக்கில் வேலினால் "ஓம் என்றெழுதி, "திருப்புகழ் பாட வரமளித்த தெய்வீக திருத்தலம், திருச்சியை அடுத்த வயலூர் முருகன் கோவில். கோவிலின் எதிரே உள்ள சக்தி தீர்த்தத்தில் அருணகிரிநாதர் தொடர்ந்து நீராடி, தனது தொழுநோய் நீக்கப்பெற்றார் என்பது வரலாறு. இத்தகைய சிறப்புமிக்க வயலூர் முருகன் கோவிலில், பிரசித்திப்பெற்ற கந்தசஷ்டி விழா, தீபாவளியன்று துவங்கி நேற்று முன்தினம் முடிந்தது. கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளில் நடக்கும், தேவசேனா (தெய்வானை)- சுப்ரமணிய ஸ்வாமி திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து, முருகனிடம் மனமுருகி வேண்டிக் கொண்டால், அடுத்த கந்தசஷ்டி திருவிழாவுக்குள் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதுபோன்ற வேண்டிக்கொண்டவர்கள் ஏராளமானோர் திருமணம் கைகூடி சிறப்பான வாழ்வை பெற்றிருக்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க, திருக்கல்யாண வைபவம், நேற்று முன்தினம் இரவு, 8 மணிக்கு நடந்தது. திருமணமாகாத இளைஞர், இளம்பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, இரவு, 7 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும், 7.30 மணிக்கு சென்னை இசைக்கல்லூரி மாணவர்கள் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar