Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளய அமாவாசை; ராமேஸ்வரத்தில் ... சீர்காழி, சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழா சீர்காழி, சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய பட்ச அமாவாசை தர்ப்பணம்; காவிரி சங்கமத்துறையில் குவிந்த மக்கள்
எழுத்தின் அளவு:
மகாளய பட்ச அமாவாசை தர்ப்பணம்; காவிரி சங்கமத்துறையில் குவிந்த மக்கள்

பதிவு செய்த நாள்

02 அக்
2024
09:10

மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர்  கடலில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

இறந்த தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது அவசியம். முன்னோர் இறந்த தேதி, ஆடி, தை அமாவாசையில் வீட்டிலோ அல்லது நதிக்கரைகள், சமுத்திர கரைகளில் திதி கொடுப்பதன் மூலம் அவர்களது ஆசி கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள் எமன் அனுமதியோடு நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்ளும் நாளான புரட்டாசி மாத மகாளயபட்ச அமாவாசையில் அவசியம் திதி கொடுத்தால் செல்வம் பெருகி குடும்ப நிலை உயரும், குழந்தைகள்  கல்வி பெற்று பெருவாழ்வு பெறுவர் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாளய பட்ச அமாவாசையான இன்று மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவேரி சங்கமத் துறையில் ஏராளமானோர் புனித நீராடி வேத விற்பன்னர்கள் மற்றும் ஆச்சாரியார்கள் வழிகாட்டுதலின்படி தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறிகள், தானியங்களை தானமாக கொடுத்து வழிபாடு நடத்தினர். இதுபோல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் காலையிலேயே திரண்ட மக்கள் முக்குளத்தில் நீராடி ருத்ரபாதத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar