காரமடை ராமச்சந்திர மூர்த்தி கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2024 04:10
காரமடை; காரமடை அருகே மருதூர் செல்லப்பனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ஸ்ரீசீதா சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மற்றும் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.