Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 500 கிலோ ... பறிமுதலான ஏகாம்பரநாதர் கோவில் சிலைகள் காஞ்சிபுரத்துக்கு மாற்றம் பறிமுதலான ஏகாம்பரநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி பாலசுப்பிரமணியர் கோவிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
தேனி பாலசுப்பிரமணியர் கோவிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

15 நவ
2024
10:11

தேனி; போடிநாயக்கனூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று பணி சன்னதியில் வீற்றிருக்கும் சிவனுக்கு  அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 16 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சிவ நாம முழங்க அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவனை தரிசித்தனர்.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலைத்துறை நிர்வாகம் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.  இன்று ஐப்பசி மாதம் பௌர்ணமி அஸ்வினி நட்சத்திரத்தை முன்னிட்டு ஆலயப் பிரகாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதருக்கு   அன்னாபிஷேகம் நடைபெற்றது. காசி விஸ்வநாதருக்கு பஞ்சகவியம் ,சந்தனாதித் தைலம் ., திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம் பன்னீர் சந்தனம் விபூதி போன்ற 16 வகை வாசனாதி திரவியங்கள் மூலம் சிவனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. லிங்கத் திருமேனியாய் வீற்றிருக்கும்  காசி விஸ்வநாதருக்கு முழுக்க முழுக்க சூடான அன்னத்தினாலும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து லட்சதீபம் பஞ்சதீபம் போன்ற தீபங்கள் ஏற்றி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவனை தரிசித்துச் சென்றனர். அனைவருக்கும் ஆலய  நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை ... மேலும்
 
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar