Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் கோயில் ... பெரியகுளம் வரதராஜப் பெருமாளுக்கு அன்னக்கூடை பூஜை நடந்தது பெரியகுளம் வரதராஜப் பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை, வெயிலில் வீணாகும் கோவில் தேர்; மீஞ்சூரில் பக்தர்கள் அதிருப்தி
எழுத்தின் அளவு:
மழை, வெயிலில் வீணாகும் கோவில் தேர்; மீஞ்சூரில் பக்தர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள்

27 நவ
2024
05:11

மீஞ்சூர்; வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த இரு கோவில்களிலும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் அடுத்தடுத்து பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெறும்.


பிரம்மோற்சவத்தின்போது, இருகோவில்களிலும் தேர் திருவீதி உலா விமரிசையாக நடபெறும். இவ்விரு கோவில்களுக்கும் ஒரே தேர் பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்த பழமையான மரத்தேர் சிதிலம் அடைந்ததை தொடர்ந்து, கடந்த, 2016ல், ஒரு கோடி ரூபாய் செலவில், 45அடி உயரத்தில் புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டு திருவிழாக்களின்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேர் மழை, வெயிலில் பாதிப்படையாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநலச் சங்கத்தின் சார்பில், இருபுறமும் இரும்பு ஷட்டர்களுடன் கூடிய தனி கட்டடம் அமைத்து தரப்பட்டது. மோட்டார் உதவியுடன் ஷட்டர்களை ஏற்றி இறக்கும் வகையில் இது அமைந்தது. பிரம்மோற்வத்தின்போது, கட்டடத்தில் இருந்து வெளியில் கொண்டு வரப்படும். திருவிழா முடிந்தவுடன், நிலையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஷட்டர் கீழிறிக்கி பூட்டப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட தேர் கட்டடத்தில் உள்ள இரும்பு ஷட்டர்கள் பழுதடைந்தது. அதை சரிசெய்வதில் கோவில் நிர்வாகங்கள் அலட்சியம் காட்டி வருகின்றன. இதனால் மழை, வெயிலில் தேர் பாழாகி வருகிறது. மேலும், சமூக விரோதிகள், தேர் கட்டடத்தின் உள்ளே அமர்ந்து மது அருந்துவது, புகைப்பது என இருக்கின்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில், தேரின் மீது மழைநீர் பட்டு அதில் உள்ள வர்ணங்கள் மங்கி வருவதுடன், உறுதி தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. தேர் முழுமையாக பாதிப்படையும் முன், உடனடியாக இரும்பு ஷட்டர்களின் பழுதுகளை நீக்கி, அவ்வப்போது பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar