Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எருமேலி, புல் மேடு பாதைகள் திறப்பு; ... சபரிமலையில் ஜன., 16 வரை தரிசன முன்பதிவு நிறைவு; தினமும் 8 முதல் 10 ஆயிரம் ஆப்சென்ட் சபரிமலையில் ஜன., 16 வரை தரிசன முன்பதிவு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் ரோப்வே: ஜனவரியில் அடிக்கல் நாட்ட தேவசம்போர்டு நடவடிக்கை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ரோப்வே: ஜனவரியில் அடிக்கல் நாட்ட தேவசம்போர்டு நடவடிக்கை

பதிவு செய்த நாள்

05 டிச
2024
11:12

சபரிமலை; ஜனவரியில் மகர விளக்கு கால பூஜை முடிந்த பின்னர் சபரிமலை ரோப்பே திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.


சபரிமலைக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதற்கு தற்போது டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டர்களுக்கு பதிலாக ரோப்பே திட்டத்திற்கு வடிவம் கொடுக்கப்பட்டது. ஆனால் வனத்துறை, நிலம் சம்பந்தமான பிரச்சினை எழுப்பியதால் அது பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. கேரள உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி வருவாய், வனம் மற்றும் தேவசம் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ரோப்வே திட்டத்துக்காக வனத்துறை வழங்கும் நிலத்துக்கு பதிலாக கொல்லம் மாவட்டத்தில் மாற்று நிலம் வழங்கப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து ரோப்வே பணி துரிதமடைந்துள்ளது. 2.7 கி.மீ. தூரமுள்ள இந்த ரோப் வேக்கு 40 முதல் 60 மீட்டர் வரை உயரத்தில் தூண்கள் அமைக்கப்படுகிறது. பம்பை ஹில்டாப்பில் தொடங்கும் இந்த பாதை சன்னிதானம் போலீஸ் தங்குமிடம் அமைந்துள்ள கட்டடம் அருகே முடிவடைகிறது. இதில் நான்கு கார் ஆம்புலன்ஸ்களும் உண்டு. தாமோதர் கேபிள் கார் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் பி. ஓ. டி. திட்டத்தில் இதை ஒப்பந்தம் செய்துள்ளது. 250 கோடி ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. 18 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மகர விளக்கு கால பூஜை முடிந்த பின்னர் பம்பையில் அடிக்கல் நாட்டப்படும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகின்றனர். மத்திய வனத்துறையிடம் இருந்து சில அனுமதி தவிர மீதமுள்ள அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 
temple news
மூணாறு:  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ... மேலும்
 
temple news
சபரிமலை: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar