Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமடம் ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த ... காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் லட்சதீப திருவிழா விமரிசை காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 52 கலசங்களுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 52 கலசங்களுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

10 டிச
2024
10:12

பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழாவையொட்டி, 52 கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.இதற்காக, கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலாலயம் நடந்தது. கடந்த, 14ம் தேதி மூலஸ்தானம் மற்றும் மற்ற சன்னதி சுவாமிகளுக்கு பாலாலயம் நடந்தது.இதைத்தொடர்ந்து, திருப்பணிகள் நடைபெறுவதுடன், யாக சாலையில் ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி வேதபாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரத்துக்கு நான்கு அடியில் ஏழு கலசங்கள்; கருவறை விமானத்துக்கு மூன்று கலசங்கள்; திசை கோபுரங்களுக்கு மூன்று அடியில், 10 கலசங்கள்; பரிவார மூர்த்திகளுக்கு ஒரு அடியில், 32 கலசங்கள், என, மொத்தம், 52 கலசங்கள் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டன. அவை, நா.மூ., சுங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தயார்படுத்தப்பட்டன.இந்நிலையில், நேற்று கும்பாபிேஷக விழாவையொட்டி கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, கோபுரங்களில், கலசங்கள் பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது. அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மருதமுத்து, மஞ்சுளாதேவி மற்றும் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். வரும், 12ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar