Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமடம் ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த ... காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் லட்சதீப திருவிழா விமரிசை காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 52 கலசங்களுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 52 கலசங்களுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

10 டிச
2024
10:12

பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழாவையொட்டி, 52 கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.இதற்காக, கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலாலயம் நடந்தது. கடந்த, 14ம் தேதி மூலஸ்தானம் மற்றும் மற்ற சன்னதி சுவாமிகளுக்கு பாலாலயம் நடந்தது.இதைத்தொடர்ந்து, திருப்பணிகள் நடைபெறுவதுடன், யாக சாலையில் ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி வேதபாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரத்துக்கு நான்கு அடியில் ஏழு கலசங்கள்; கருவறை விமானத்துக்கு மூன்று கலசங்கள்; திசை கோபுரங்களுக்கு மூன்று அடியில், 10 கலசங்கள்; பரிவார மூர்த்திகளுக்கு ஒரு அடியில், 32 கலசங்கள், என, மொத்தம், 52 கலசங்கள் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டன. அவை, நா.மூ., சுங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தயார்படுத்தப்பட்டன.இந்நிலையில், நேற்று கும்பாபிேஷக விழாவையொட்டி கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, கோபுரங்களில், கலசங்கள் பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது. அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மருதமுத்து, மஞ்சுளாதேவி மற்றும் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். வரும், 12ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar