விழுப்புரம் பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2024 11:12
விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான பலனை தர கூடிய ‘கைசிக ஏகாதசி’உற்சவம், விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 6:00 மணியளவில், வைகுண்டவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளி, அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.