Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் ... திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ராஜகோபாலன் அலங்காரம் திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நான்காம் நாள்; செந்தூர பட்டுடுத்தி நம்பெருமாள் சேவை
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நான்காம் நாள்; செந்தூர பட்டுடுத்தி நம்பெருமாள் சேவை

பதிவு செய்த நாள்

03 ஜன
2025
10:01

ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் பகல் பத்து நான்காம் நாளில் நம்பெருமாள் முத்து கிரீடம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா 21 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் கடந்த 30 ஆம் தேதி திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. கடந்த 31ஆம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் நான்காம்  திருநாளான இன்று நம்பெருமாள் முத்துகொண்டை எனப்படும் முத்துகிரீடம் அணிந்து, வைர பெருமாள் தாயார் பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், வைரப்பதக்கம், நெல்லிக்காய் மாலை, முத்துசரம், அடுக்கு பதக்கங்கள் பின்புறம் புஜகீர்த்தி உள்ளிட்ட திருவாவரணங்கள் சூடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, அரையர் பாசுரங்களை கேட்டருளி, அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். தொடர்ந்து இன்று மாலை வரை அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சாட்சி அளிக்கும் நம்பெருமாள் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று அடைகிறார். வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவில் வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி பகல் 10 நிறைவு நாளான அன்று நம் பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar