Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோதண்டராமஸ்வாமி ... சிங்கம்புணரி பத்திரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை சிங்கம்புணரி பத்திரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பூபதித்திருநாள் (தைத்தேரோட்டம் ) முஹூத்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பூபதித்திருநாள் (தைத்தேரோட்டம் ) முஹூத்தக்கால் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

01 பிப்
2025
08:02

ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) நேற்று அங்குரார்ப்பணம் (முஹூத்தக்கால் நடும் வைபவம்) நடைபெற்றது.


ரங்கநாதருக்கு ராமர் கொண்டாடிய விழா தை மாதம் நடக்கிறது. இவ்விழா ராமர் நடத்திய விழா என்பதால், பூபதி திருநாள் எனப்படுகிறது. இதை ராமரே நடத்துவதாக ஐதீகம். ஸ்ரீரங்கம் கோயிலில் மிக முக்கிய விழாவான “பூபதி திருநாள்” என்றழைக்கப்படும் தைத்தேரோட்டம் விழாவை முன்னிட்டு ஸ்தம்ப ஸ்தாபனம் (முஹூத்தக்கால் நடும் வைபவம்) நடைபெற்றது. முன்னதாக முகூர்த்தக்காலில் சந்தனம், மாவிலை, பூமாலை, உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் தெளிக்கப்பட்டது.  அதன் பின்னர் முஹூத்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது. இதில் கோயில் இணைஆணையர் மாரியப்பன், ஆஸ்தான பட்டர் சுவாமிகள், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


விழாவில் தை மாதம் 21-ம் தேதி 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கும் விழாபதினொன்றாம் திருநாளில் 12.02.2025 புதன்கிழமை ஆளும் பல்லக்கு விழாவுடன் முடிவடையும். பதினொன்று நாட்கள் நடைபெறும் இந்த பூபதித் தை திருநாளில் தினமும் காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பூபதித் திருளானின் ஒன்பதாம் திருநாளான தை மாதம் 28-ம் தேதி 10.02.2025 திங்கள்கிழமை “தைத்தேர்” வைபத்தை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு தைத்தேர் மண்டபம் சென்றடைகிறார். பின்னர் 4.30 மணி முதல் 5.15 வதை ‘ரதரோஹணம்’  தனுர் லக்னத்தில் நடைபெறுகிறது. திருத்தேர் வடம் பிடித்த்ல் வைபவம் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து தேரானது நிலை வந்தடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar