Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கடும் ... திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; உச்சகட்ட பரபரப்பில் குன்றத்து முருகன் கோவில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ரதசப்தமி விழா; ஏழுமலையானின் பல்வேறு அலங்காரம் கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருப்பதி ரதசப்தமி விழா; ஏழுமலையானின் பல்வேறு அலங்காரம் கண்டு பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2025
11:02

திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோவிலில் இன்று (பிப்.,4) ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வலம் வருவதை கண்டு பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் மக சுத்த சப்தமியின் போது இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதே நாளில் சூரிய பிரபை, சின்ன சேஷ, கருடன், ஹனுமா, கல்ப விருட்சம், சர்வ பூபால, சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் ஸ்ரீ மலையப்ப சுவாமி அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விழா அர்த்த பிரம்மோத்ஸவம் என்றும், மினி பிரம்மோத்ஸவம் என்றும், ஒரு நாள் பிரம்மோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி.1564 முதல் திருமலையில் ரத சப்தமி விழா கொண்டாடப்பட்டதாக பதிவுகள் உள்ளன. சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி அருள்பாலிக்க உள்ளார்.


சூர்ய பிரபா வாகனம்; மிக முக்கியமான ரத சப்தமி வாகனமான சூரிய பிரபை வாகனத்தில் இன்று காலை 5.30 முதல் 8 மணி வரை சுவாமி வலம் வந்து அருள்பாலித்தார். இந்த தனித்துவமான காட்சியைக் காண விடியற்காலை முதல் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த பக்தர்கள் பக்தியால் பரவசமடைந்தார். பக்தர்களின் கோவிந்தன கோஷங்களுக்கு மத்தியில் இறைவனின் வாகனம் சேவை சிறப்பாக நடைபெற்றது. சூரியபிரப வாகனத்தில் ஸ்ரீநிவாசனை தரிசனம் செய்வதால், ஆரோக்கியம், கல்வி, செல்வம், சந்ததி போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொடர்ந்து, காலை 9 முதல் 10 வரை சின்னசேஷ வாகனம், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகனம்,  பிற்பகல் 1 முதல் 2 வரை ஹனுமந்த வாகனம், மதியம் 2 முதல் 3 வரை புஷ்கரிணியில் சக்ரஸ்நானம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம், இரவு 8 முதல் 9 வரை சந்திர பிரபை வாகனம் என ஏழு வாகனத்தில் மலையப்பசுவாமி வலம் வருகிறார். விழாவில்  தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, EO ஷியாமளா ராவ், கூடுதல் EO வெங்கையா சவுத்ரி, ஆட்சி மன்ற உறுப்பினர்கள் ஜோதுலா நேரு, எம்.எஸ். ராஜு, பனபக லட்சுமி, வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி, பானு பிரகாஷ் ரெட்டி, என். சதாசிவ் ராவ், சுசித்ரா எல்லா, நரேஷ், சாந்தா ராம்,ராஜசேகர் கவுட், ரங்கஸ்ரீ,ஜானகிதேவி, JEO வீரபிரம்மம், SP ஹர்ஷவர்தன் ராஜு, CVSO மணிகந்தா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஐந்து ... மேலும்
 
temple news
கோவை; சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் தை மாதம் நான்காவது ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி கோவிலில் ரத சப்தமி விழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar