Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கடும் ... திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; உச்சகட்ட பரபரப்பில் குன்றத்து முருகன் கோவில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ரதசப்தமி விழா; ஏழுமலையானின் பல்வேறு அலங்காரம் கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருப்பதி ரதசப்தமி விழா; ஏழுமலையானின் பல்வேறு அலங்காரம் கண்டு பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2025
11:02

திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோவிலில் இன்று (பிப்.,4) ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வலம் வருவதை கண்டு பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் மக சுத்த சப்தமியின் போது இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதே நாளில் சூரிய பிரபை, சின்ன சேஷ, கருடன், ஹனுமா, கல்ப விருட்சம், சர்வ பூபால, சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் ஸ்ரீ மலையப்ப சுவாமி அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விழா அர்த்த பிரம்மோத்ஸவம் என்றும், மினி பிரம்மோத்ஸவம் என்றும், ஒரு நாள் பிரம்மோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி.1564 முதல் திருமலையில் ரத சப்தமி விழா கொண்டாடப்பட்டதாக பதிவுகள் உள்ளன. சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி அருள்பாலிக்க உள்ளார்.


சூர்ய பிரபா வாகனம்; மிக முக்கியமான ரத சப்தமி வாகனமான சூரிய பிரபை வாகனத்தில் இன்று காலை 5.30 முதல் 8 மணி வரை சுவாமி வலம் வந்து அருள்பாலித்தார். இந்த தனித்துவமான காட்சியைக் காண விடியற்காலை முதல் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த பக்தர்கள் பக்தியால் பரவசமடைந்தார். பக்தர்களின் கோவிந்தன கோஷங்களுக்கு மத்தியில் இறைவனின் வாகனம் சேவை சிறப்பாக நடைபெற்றது. சூரியபிரப வாகனத்தில் ஸ்ரீநிவாசனை தரிசனம் செய்வதால், ஆரோக்கியம், கல்வி, செல்வம், சந்ததி போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொடர்ந்து, காலை 9 முதல் 10 வரை சின்னசேஷ வாகனம், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகனம்,  பிற்பகல் 1 முதல் 2 வரை ஹனுமந்த வாகனம், மதியம் 2 முதல் 3 வரை புஷ்கரிணியில் சக்ரஸ்நானம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். இரவு 8 முதல் 9 வரை சந்திர பிரபை வாகனம் என ஏழு வாகனத்தில் மலையப்பசுவாமி வலம் வருகிறார். விழாவில்  தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, EO ஷியாமளா ராவ், கூடுதல் EO வெங்கையா சவுத்ரி, ஆட்சி மன்ற உறுப்பினர்கள் ஜோதுலா நேரு, எம்.எஸ். ராஜு, பனபக லட்சுமி, வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி, பானு பிரகாஷ் ரெட்டி, என். சதாசிவ் ராவ், சுசித்ரா எல்லா, நரேஷ், சாந்தா ராம்,ராஜசேகர் கவுட், ரங்கஸ்ரீ,ஜானகிதேவி, JEO வீரபிரம்மம், SP ஹர்ஷவர்தன் ராஜு, CVSO மணிகந்தா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar