Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ... திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவிலில் தைப்பூச விழா திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் தைப்பூச விழா; கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் தைப்பூச விழா; கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2025
02:02

தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.


முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் கடந்த, 5ம் தேதி, கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவங்கியது. காலையும், மாலையும், யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை, பகல், மாலை என, மூன்று முறை, கற்பகவிருட்சம், அன்ன வாகனம், அனந்தாசனம், மான், சூரிய பிரபை, சந்திர பிரபை, பத்மாசனம், கேடயம், ஆட்டு கிடாய் வாகனம் வாகனங்களில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி திருவீதி விழா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆறாம் நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளான இன்று அதிகாலை, 1:00 மணிக்கு, கோ பூஜை, 16 வகையான அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 4:00 சுப்பிரமணிய சுவாமி, பவள அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


காலை, 6:00 மணிக்கு, உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனைத்தொடர்ந்து, உற்சவரான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, முத்தங்கி அலங்காரத்தில், யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து, திருத்தேரில் எழுந்தருளினார். காலை, 11:05 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, மருதமலையின் மீது நின்று கொண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்கள், விண்ணை பிளக்க, தைப்பூச தேரோட்டம் நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று மாலை முதல் இன்று வரை, பல லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மருதமலைக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு மருதமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாகராஜ் ; உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் ... மேலும்
 
temple news
அவிநாசி; தைப்பூச திருநாளை முன்னிட்டு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்திற்கு, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரியால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில் பா.ஜ., மாநில தலைவர் காவடி எடுத்து வந்து சுவாமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : தஞ்சாவூர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar