Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பமேளாவில் குடும்பத்துடன் புனித ... கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பூச்சாட்டு உற்சவம் கோவை கோனியம்மன் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில் கருவறைக்குள் சுரங்கப்பாதை; திருவள்ளூர் அருகே கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
முருகன் கோவில் கருவறைக்குள் சுரங்கப்பாதை; திருவள்ளூர் அருகே கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

19 பிப்
2025
11:02

திருவள்ளூர்; திருவள்ளூர் அருகே பட்டரைப்பெரும் புதுார் முருகன் கோவிலில், பழங்கால சுரங்கப்பாதை இருப்பதை, தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.


சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிக்காக, திருவள்ளூரை அடுத்த, பட்டரைபெரும்புதுாரில் உள்ள, 9, 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலை அகற்றப் போவதாக, நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்து இருந்தனர். பழமையான கோவில் என்பதால், இடிப்பதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே, கோவிலுக்குள் சுரங்கப்பாதை இருப்பதாக, முன்னோர்கள் சொன்ன தகவலை, அப்பகுதியினர் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ.லோகநாதன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, கோவில் கருவறைக்குள் சுரங்கப்பாதை இருப்பதை கண்டறிந்தனர். இது, 1.5 மீட்டர் அகலம், 7 அடி ஆழம் கொண்டதாக உள்ளது.


இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: முருகன் கோவில், 9, 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என்பதால், முக்கிய ஆவணங்கள் அல்லது நகைகள், சிலைகளை காப்பதற்காக, சுரங்கப்பாதை ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், சுரங்கப்பாதை உள்ளே சென்று பார்க்க முடியாத சூழல் உள்ளது. இது எவ்வளவு துாரம் செல்லும் என தெரியவில்லை. அரசின் அனுமதி பெற்று, பாதுகாப்பு வசதிகளுடன் சென்று, அடுத்த கட்ட ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையறிந்த கிராமத்தினர், இந்த சுரங்கப்பாதையை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 


கிராமத்தினர் கூறுகையில், ‘இந்த சுரங்கப்பாதை திருப்பாச்சூர், திருவாலங்காடு வரை நீடித்திருக்க வாய்ப்புள்ளது. இது, மிக பழமை வாய்ந்த கோவில் என்பதால், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கோவிலை அகற்றக்கூடாது’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar