இன்று பிரதோஷம், திருவோண விரதம்; சிவன், பெருமாளை வழிபட சிறப்பான நாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2025 11:02
சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம். பிரதோஷம் சிவனை வழிபட மிக சிறந்த நாள் ஆகும். பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது. காலை, மாலை வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபட செய்வது நல்லது. ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான நாள். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. இன்று சிவன், பெருமாளை வழிபட்டு அவர்களின் திருவடியை போற்றுவோம்!