Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்தூர் முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
குன்றத்தூர் முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

03 மார்
2025
10:03

சென்னை; 500 ஆண்டுகளுக்கு பிறகு குன்றத்தூர் முருகன் கோவிலில் இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது


குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது மலை குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் பல்வேறு காரணங்களால் கடந்த 500 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படாமல் இருந்து வந்தது இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இந்த கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதன் காரணமாக சூரசம்ஹாரம், பிரம்மோற்சவம், தைப்பூச விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக சுமார் 500 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் முறையாக பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து முடித்து வைக்கப்பட்ட பின்பு வேல், சேவல் கொடியுடன் கூடிய கொடிக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் செய்யப்பட்டு கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டு பிரம்மோற்சவ இன்று தொடங்கியது தினமும் காலை மாலை என இரு வேலைகளில் பிரம்மோற்சவ விழா நடைபெறும் நிலையில் இன்று தொடங்கிய பிரம்மோற்சவ விழா மார்ச் மாதம் 12ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐந்தாம் நாளான, 7ம் தேதி காலையில் கேடய உற்சவமும், மாலையில் திருக்கல்யாணமும், ஏழாம் நாளான 9 ம் தேதி ரத உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசிப்பெருந்திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பெண்களின் சபரிமலை எனப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில், 48 ஆண்டுகளுக்கு பின், அனுமந்தராய சுவாமி திருவீதியுலா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா மார்ச் 3- ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar