Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டை கரிகால ... திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் மாடுகள் உலா : பக்தர்கள் பீதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் மாடுகள் உலா : பக்தர்கள் பீதி

பதிவு செய்த நாள்

04 மார்
2025
05:03

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை சாலையில் உலா வரும் மாடுகளால், பக்தர்கள் பீதி அடைகின்றனர்.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுகின்றனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு பக்தர்கள் பூஜை செய்த வாழை பழங்களை அங்கு நிற்கும் ஒரிரு மாடுகளுக்கு தானமாக கொடுப்பது வழக்கம். இதனை பயன்படுத்தி கால்நடை வளர்ப்பு 20க்கும் மேலான மாடுகளை அக்னி தீர்த்த கடற்கரையில் விடுகின்றனர். இந்த மாடுகளுக்கு கீரை தானம் செய்யுங்கள் என சிலர் கூவி பக்தரிடம் கீரை விற்கின்றனர். இக்கீரையை திண்ணும் ஆவலில் ஆக்ரோஷமாக ஓடி வரும் மாடுகள் பக்தர்களை முட்டி தள்ளிவிட்டு கீரையை உட்கொள்கிறது. இதனால் பக்தர்கள் பலரும் காயம் அடைந்துள்ளனர். இந்த மாடுகளை அப்புறப்படுத்தி, கீரை விற்பதை தடுக்க ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் பக்தர்கள் காயமடைந்து மனதிருப்தி இன்றி திரும்பிச் செல்கின்றனர். ஆகையால் பக்தர்களை அச்சுறுத்தும் மாடுகளை பிடித்து, கால்நடை வளர்ப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar