பதிவு செய்த நாள்
05
மார்
2025
04:03
பல்லடம்; பல்லடம் மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா விமரிசையாக நடந்தது. பல்லடம் பனப்பாளையத்தில், விநாயகர், மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா பிப்., 24 அன்று பூச்சாட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது. மார்ச் 2 அன்று கிராம சாந்து நிகழ்வும், இதையடுத்து, மறுநாள் இரவு, 8.00 மணிக்கு, அம்மன் அழைப்பு மற்றும் கம்பம் போடுதல் நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து, பூவோடு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகளில், ஏராளமான பெண்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இன்று காலை, 9.00 மணிக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்த பெண்கள், அவற்றை அம்மனுக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன், மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாளை மஞ்சள் நீராடுதல், அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகளுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.