பதிவு செய்த நாள்
05
மார்
2025
04:03
சங்கராபுரம்; சங்கராபுரம் முருகன் கோவில்களில், கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. சங்கராபுரம் வட்டம், தேவ பாண்டலம், குந்தவேல் முருகன் கோவிலில், சுவாமிக்கு கிருத்திகையையொட்டி, பால், தயிர், இளநீர் உள்ளிட்டவைகளால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல காட்டுவனஞ்சூர், சுப்ரமணியர் கோவில்; சங்கராபுரம் சன்னதி தெரு, முருகன் கோவில்; பூட்டை ரோடு முருகன் கோவில்களிலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன.