Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோவிலில் டிச.10ல் ... சுகவனேஸ்வரர் கோவிலில் பதிலி அர்ச்சகர்கள்! சுகவனேஸ்வரர் கோவிலில் பதிலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 டிச
2012
10:12

ஒட்டன்சத்திரம்: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப்பாதை அமைக்க தடையாக இருந்த, ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஒட்டன்சத்திரத்தில் துவங்கியது. பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை, தேனி, காரைக்குடி, திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ரோடுகள் வழியாக பழநியை நோக்கி வந்த போதிலும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரே ரோட்டில் (ஒட்டன்சத்திரம் - பழநி ரோடு) தான் செல்ல வேண்டும். இதனால் தைப்பூசம் துவங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பே போக்குவரத்து தாராபுரம் ரோட்டில் திருப்பி விடப்படும். இருந்த போதிலும் ஆண்டுதோறும் விபத்துகள் நடந்து, உயிர் சேதம் ஆகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும்,பக்தர்களின் வசதிக்காகவும் 6 கோடி ரூபாய் செலவில், தனிப்பாதை அமைக்கப்படுகிறது. பாதை அமைப்பதற்கு தடையாக பல கடைகள், வீடுகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இவற்றை ஜே.சி.பி., மூலம் அகற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலையினர், போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் முத்துக்குமரன் கூறுகையில், மூலச்சத்திரத்திலிருந்து ஆயக்குடி வரை பக்தர்களுக்கு நடைபாதை அமைக்கப்படுகிறது. இதற்கு தடையாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar