பதிவு செய்த நாள்
22
மார்
2025
06:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆன்மீக விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் தலைவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வருகை தந்தவர் ஸ்ரீ காளஹஸ்தீஷ்வரரையும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்ததைத் தொடர்ந்து கோயில் விடுதியான கங்கா சதனில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தலைமையில், உலக நன்மைக்காக ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது; உலக நலனுக்காக நாடு முழுவதும் ஆன்மீக யாத்திரை மேற்கொண்டு வருகிறேன். ஆதி சங்கராச்சாரியார் கடந்த காலத்தில் இந்த தலத்திற்கு வருகை தந்து, இந்திய ஒற்றுமைக்காக தர்மத்தை மேம்படுத்தவும் மனித விழுமியங்களை மேம்படுத்தவும் இமயமலை, மானசரோவர் மற்றும் நேபாளத்திற்கு யாத்திரை(நடைப்பயணம்) மேற்கொண்டார். மனிதகுலம் எந்த மோதல்களும் இல்லாமல் ஒன்றாக வாழ வேண்டும் என்று ஆன்மீக ரீதியில் தான் போதித்ததார். நாடுகள் வளமாக இருப்பதை உறுதி செய்ய அவர் கடுமையாக உழைத்தார். இவ்வாறு கூறினார். அப்போது, பி.வி. நரசிம்மராவ் இந்த விஜய யாத்திரையில் பங்கேற்று ஒற்றுமையை வெளிப்படுத்தினார். இன்று பக்தி பர்வத்வத்தின் செய்தியை நாடு முழுவதும் பரப்புவதற்காக இதேபோன்று விஜய யாத்திரையைத் தொடங்கியுள்ளோம், இந்த விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக, நான் அருணாச்சலம், ஜம்புகேஸ்வரர், காஞ்சி ஏகாம்பேஸ்வர க்ஷேத்திரத்திற்குச் சென்றேன், இன்று நான் ஸ்ரீ காளஹஸ்தீஷ்வரரை தரிசித்தேன், அனைவரும் அறிவையும் நல் எண்ணங்களையும் பரப்ப வேண்டும் என்றும், எந்த விரோதமும் இல்லாமல், எந்த மோதல்களும் இல்லாமல் அனைத்து மக்களிடமும் கருணை காட்ட வேண்டும் என்றும், ஒற்றுமையாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.