செவிலிமேடு ராமானுஜருக்கு திருவாதிரை திருமஞ்சனம்; வெள்ளி கவசத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2025 03:04
செவிலிமேடு; காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, அனுஷ்டானகுளம், சாலை கிணறு அருகில், ராமானுஜருக்கு என, தனி சன்னிதி உள்ளது. இங்கு பங்குனி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.