Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் ... தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை கோவில்களில் சிறப்பு தரிசனம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாய்லாந்தில் தண்ணீர் திருவிழா கோலாகலம்; புத்தர் சிலை மீது நறுமண நீரை ஊற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
தாய்லாந்தில் தண்ணீர் திருவிழா கோலாகலம்; புத்தர் சிலை மீது நறுமண நீரை ஊற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஏப்
2025
10:04

 பாங்காக்; தாய்லாந்தில், புத்தாண்டை ஒட்டி நடந்த தண்ணீர் திருவிழாவில் நாடு முழுதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தாய்லாந்தின் புத்தாண்டை வரவேற்க, ‘சாங்க்ரான்’ என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. நல்லிணக்கம், அமைதி மற்றும் சமூக பிணைப்பை பிரதிபலிக்கும் இந்த திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் 13 – 15ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தண்ணீரை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. தாய்லாந்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களுடன் இணைந்து இந்த தண்ணீர் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் தண்ணீர் துப்பாக்கிகளை ஏந்தி, வீதிகளில் வருவோர் மீது தண்ணீரை உற்சாகமாக பீய்ச்சி அடிப்பர். பதிலுக்கு அவர்களும் தங்கள் கையில் இருக்கும் பொருட்களில் உள்ள தண்ணீரை கண்ணில் படுபவர்கள் மீது ஊற்றுவர். ஏப்ரல் மாதத்தில் கடும் வெப்பத்தை சந்திக்கும் தாய்லாந்து மக்கள், இந்த தண்ணீர் திருவிழா வாயிலாக குளிர்ந்த சூழலை அனுபவித்து வருகின்றனர். இந்த திருவிழாவின் போது, புத்தரின் சிலைகள் மீது நறுமண நீரை ஊற்றி வழிபடுவதை தாய்லாந்து மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஒருசில நகரங்களில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த தண்ணீர் திருவிழா, கடற்கரை நகரமான பட்டாயா உட்பட பல்வேறு இடங்களில் 10 நாட்கள் வரை நீடிக்கிறது. பாங்காக், சியாங் மாய், சாங்க்லா, சூரத் தானி போன்ற நகரங்களில் ஒரு மாதமாக கூட இந்த தண்ணீர் திருவிழா கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள், துறவிகள் மீது தண்ணீரை ஊற்றக் கூடாது போன்ற விதிமுறைகளும் பாதுகாப்பு கருதி இந்த தண்ணீர் திருவிழாவில் பின்பற்றப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருச்சி; திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.உலகப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி சனி பெயர்ச்சி ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மூலவர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக ... மேலும்
 
temple news
ஊட்டி; ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar