சிவகாசி சிவன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2025 04:05
சிவகாசி; சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சுவாமி ஊஞ்சலில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி பூத வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். ஒன்பதாம் நாள் திருவிழாவான ஜூன் 4 ல் தேரோட்டம் நடைபெறும்.