Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆற்றல் தரும் ஆதி பராசக்தி சகல நோய் தீர்த்து மக்களை காக்கும் மடிப்பாக்கம் சீதளாதேவி சகல நோய் தீர்த்து மக்களை காக்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
திருமண தடை, குழந்தை பாக்கியம் அருளும் பம்மல் அண்ணா நகர் மூங்கில் ஏரி ஸ்ரீ முத்துமாரியம்மன்
எழுத்தின் அளவு:
திருமண தடை, குழந்தை பாக்கியம் அருளும் பம்மல் அண்ணா நகர் மூங்கில் ஏரி ஸ்ரீ முத்துமாரியம்மன்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2025
01:07

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில், கடந்த 55 வருடங்களுக்கு முன், சிறிய ஓலை கொட்டகையில் ஊர் பொதுமக்களால், இக்கோவில் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. அதன்பின், ஊர் பொதுமக்கள் இணைந்து, கோவிலை புதுப்பித்து ஏற்கனவே நான்கு முறை கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கடைசியாக, 2023ம் ஆண்டு, கோவிலின் கீழ் பகுதியை 5 அடி உயரத்திற்கு உயர்த்தி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


இக்கோவிலில், விநாயகர், பால முருகர், கால பைரவர், துர்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னி, நவகிரகம், அஷ்டலட்சுமி ஆகிய பரிவார தேவதைகள் அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், இரண்டாம் வாரம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, பம்மல் சூரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் ஜோடிக்கப்பட்டு, பெண்கள் விளக்கு பூஜையுடன் ஊர்வலமாக இக்கோவிலுக்கு வருவர். தொடர்ந்து, இரண்டாம் வாரம் சனிக்கிழமை அன்று, சக்தி கிரக ஊர் வலமும், ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம், கூழ்வார்த்தல், இரவு சுவாமி வீதி உலா ஆகியவை நடக்கும்.


சித்திரை பவுர்ணமி அன்று, 108 பால்குட ஊர்வலம், நவராத்திரியை முன்னிட்டு, 10 நாட்கள் சிறப்பு அலங்காரம் மற்றும் கொலு வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆடிபூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மார்கழி மாத பூஜை, மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை பூஜை ஆகியவை சிறப்பாக நடக்கின்றன. அண்ணா நகர், பம்மல் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை மனமுருகி வேண்டினால், குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.


கோவிலின் சிறப்பு


* அம்மன் நாகரூபமாக வீற்றிருப்பதால் ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்வது சிறப்பு

* கோவிலில் உள்ள, அரசமரத்தை 6 முறை வலம் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

* தேய்பிறை அஷ்டமி அன்று, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

* ஆண்டுதோறும் வரலட்சுமி விரதம் அன்று, அஷ்டலட்சுமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.


கோவில் திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 9:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை


விசேஷ நாட்களில் நேரம் மாறுபடும்


கோவில் முகவரி


ஸ்ரீ முத்துமாரியம்மன் பக்த ஜன சபா

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்,

அண்ணா நகர், மூங்கில் ஏரி, பம்மல்,

சென்னை–75.


கோவில் தொடர்புக்கு: 9042048449

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar