Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சதுரகிரியில் மலையேற பக்தர்களுக்கு ... காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா; பக்தர்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா; பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2025
12:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று ஆடி திருவிழா நடந்தது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு, வன்னீஸ்வரர், முத்தீஸ்வரர் தோட்டம், நாக கன்னியம்மனுக்கு 25வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் புறப்பாடு, 11:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பும், கூழ்வார்த்தலும், மதியம் 2:00 மணிக்கு ஊரணி பொங்கல் புறப்பாடும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நாக கன்னியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.


கன்னியம்மன் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம், கன்னியம்மன் கோவிலில் 52வது ஆடித்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், காப்பு கட்டும் நிகழ்வு நடக்கிறது. நாளை மதியம் 1:00 மணிக்கு கோவிலில் இருந்து மாகாளியம்மன் புறப்பாடும் ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடக்கிறது. வேங்கையம்மன் காஞ்சிபுரம் அடுத்த ஊவேரி வேங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தது. மதியம் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர். சந்தவெளி அம்மன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், ஆடித்திருவிழாவின் 12ம் நாளான நேற்று முன்தினம் மகாலட்சுமி அலங்காரத்திலும், நேற்று வெள்ளி கவசத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 16ம் நாள் உத்சவமான ஆக., 1ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மாரியம்மன் காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூரில் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலா நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு காப்பு கட்டிவிரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மன், பொன்னியம்மன் வீதியுலா வந்தனர். இரவு 10:00 மணிக்கு நாடகமும், தொடர்ந்து கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar