திருமலை ஏழுமலையானுக்கு, கார்த்திகை மாத (தெலுங்கு காலண்டரின் படி) திருவோண நட்சத்திரத்தன்று, ஆண்டு புஷ்ப யாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, இன்று திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, புஷ்ப யாகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. பின், மதியம், 1:00 மணி முதல் மாலை, 5:00 வரை, சாமந்தி, தாமரை, மல்லிகை உள்ளிட்ட மலர்கள்; துளசி, கதிர்பச்சை உள்ளிட்ட இலைகளால் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. இதற்காக, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, 7 டன் மலர்கள், இலைகள் கொண்டு வரப்பட்டன. புஷ்ப யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவச தரிசனம் செய்தனர்.