Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நெய்யபிஷேகம் தொடக்கம்; 24 ... சபரிமலை பக்தர்களுக்கு சத்திரத்தில் ஸ்பாட் புக்கிங்: வண்டி பெரியாறில் டோக்கன் சபரிமலை பக்தர்களுக்கு சத்திரத்தில் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
அதிர்ச்சி!: சபரிமலையில் திருடப்பட்ட தங்கம் சொன்னதை விட அதிகம்
எழுத்தின் அளவு:
அதிர்ச்சி!: சபரிமலையில் திருடப்பட்ட தங்கம் சொன்னதை விட அதிகம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2026
01:01

திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில், மீட்கப்பட்ட தங்கத்தின் அளவை விட கூடுதலாக தங்கம் திருடப்பட்டிருக்கலாம் என, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர்.


கடந்த, 1998ல், கோவில் மேற்கூரை, கருவறை கதவுகள் மற்றும் கருவறை முன் உள்ள துவார பாலகர் சிலைகளுக்கு தங்கக் கவசங்கள் அணிவிக்க, தொழிலதிபர் விஜய் மல்லையா, 30.3 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். இதை வைத்து, சுவாமி அய்யப்பன் கொலுவீற்றிருக்கும் சன்னிதானத்தின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்கும் தங்கக் கவசங்கள் அணிவிக்கப்பட்டன.


10 பேர் கைது: கடந்த, 2019ல், துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்கள் கழற்றப்பட்டு, தங்க முலாம் உள்ளிட்ட செப்பனிடும் பணிகளுக்காக, கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், சென்னையில் உள்ள, ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு தங்கக் கவசங்களை எடுத்து வந்து செப்பனிடும் பணிகளை மேற்கொண்டார். பணிகள் முடிந்ததும், கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வசம் தங்கக் கவசங்கள் ஒப்படைத்த போது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தங்கம் மாயமானது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது. துவார பாலகர் சிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக ஒரு வழக்கும், கோவில் கருவறையில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக மற்றொரு வழக்கும் என, இரு வழக்குகளை பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது. இதில், முக்கிய குற்றவாளியான, உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கள் உட்பட இவ்வழக்கில் இதுவரை, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; எருமேலியில் பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர் குழுவின் பேட்டை துள்ளல் நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் வருகை தாறுமாறானதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகர சங்கரம பூஜை 14 - ம் தேதி மாலை 3.08 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை மண்டல மகர விளக்கு சீசனில் அரவணை பிரசாதம் தொடர்ந்து தட்டுப்பாடாகவே உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar