கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விழுப்புரம்: வளவனுார், குமாரபுரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் தங்க கவசத்தில் அம்மன் திருத்தேர் விழா நடந்தது.
பிரம்மோற்சவ திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் வாகனங்களில் வீதியுலா நடந்தது.
நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு தங்கக் கவசத்தில் அம்மன் திருத்தேர் புறப்பட்டது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும், விமானத்தில் அம்மன் வீதியுலா, துவஜா அவரோகணம் கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும் 28 ம் தேதி இரவு 7:00 மணிக்கு மகா கும்ப பள்ளயம் நடக்கிறது. ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்தனர்.