புதிதாக குடி வந்த ஒருவர், ‘அரிசி வாங்கலையோ! அரிசி வாங்கலையோ’ என கூவியபடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் அவரை பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை. விற்பதற்கான அரிசியும் அவரிடம் இல்லை. அவரை பார்த்தவர்கள், “ஆளைப் பார்த்தா வியாபாரியா தெரியலையே” என ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர். அப்போது அங்கு வந்த துறவி ஒருவர், “அவர் என்ன சொல்கிறார் தெரியுமா.... ஊருக்குள் கோயில் இல்லை என்பதை நமக்கு சொல்கிறார். அரி – திருமால், சிவா – சிவபெருமான். இந்த இருவருக்கும் கோயில் இல்லையே என மறைமுகமாக கேட்கிறார்” என்றார். இக்கதையின் மூலம் எல்லா ஊரிலும் சிவன், பெருமாள் கோயில் இருக்க வேண்டும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.