Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா கண்டமானடி கோயிலில் மகா சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் மயான கொள்ளை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2013
10:03

திருத்தணி:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில், நேற்று நடந்த மயான கொள்ளை திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருத்தணி பழைய பஜார் தெருவில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில், நேற்று முன்தினம் மகா சிவராத்திரி முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, இரவு முழுவதும் பஜனை கோஷ்டியினரின் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. நேற்று, மயான கொள்ளை திரு விழாவை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 1:30 மணிக்கு உற்சவர் பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தார். பின்னர் அம்மன் ஊர்வலமாக ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள நந்தி ஆற்றில் மயான சூரை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அம்மன் மீது காய்கறி, சுண்டல் மற்றும் தானிய விதைகள் வீசி எரிந்து வழிப்பட்டனர். ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டை அடுத்த, நரசிம்மபேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை திருவிழா நடந்தது. காலை, 11:00 மணிக்கு உற்சவர் அம்மன் பூ பல்லக்கில் ஊர்வலமாக மயானத்தை நோக்கி புறப்பட்டார். பக்தர்கள் பத்ரகாளியம்மன் வேடம் அணிந்து மயானத்திற்கு திரண்டனர். அப்பால்ராஜூலு கண்டிகை கூட்ரோட்டில் உள்ள மயானத்தில் மயான கொள்ளை நடந்தது. அதேபோல் விளக்காணம்பூடி புதூர் கிராமத்திலும் மயான கொள்ளை திருவிழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஐந்தாம் நாளில் பல்லக்கு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் பூச்சொரிதலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலம் என, ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar