Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரவான்! சிந்து! சிந்து!
முதல் பக்கம் » பிரபலங்கள்
மகிஷாசுரன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மார்
2013
04:03

முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் இருந்தார். அவர் மகா பெரிய தபஸ்வி. அவர் பல காலம் கடுந்தவம் புரிந்ததால் மற்ற முனிவர்கள் அவர்மேல் மிகவும் மதிப்பு வைத்து இருந்தனர் ஆனால் இவ்வளவு தவம் செய்த முனிவருக்குத் தற்பெருமை எனும் பெருங்குறை மட்டும் இருந்தது. ஒருமுறை, அகத்தியர் முதலான ரிஷிகள் அவரைக் காணவந்தனர். செருக்கு கொண்ட வரமுனி அவர்களை மதிக்கவில்லை, மரியாதையும் செய்யவில்லை. கோபமுற்ற அவர்கள் மற்றவர்களை மதிக்காத நீர், எருமையாகக் கடவீர். என்று சபித்தனர். வரமுனியும் தன் தவறை உணர்ந்தார். வேண்டாம் என்னை அப்படி சபிக்காதீர்கள் என்று அவர்களையே சரணடைந்தார். அடுத்த பிறவியில் நீர் மகிஷமாகப் பிறப்பீர். கருணாமூர்த்தியும் பாபத்தைப் போக்குபவளுமான ஜகன்மாதா உமக்கு அனுக்ரகிப்பாள் என்றனர். வரமுனிதான் மகிஷாசுரனாகப் பிறந்தார்.

கடின தவம் மேற்கொண்ட மகிஷன் பிரம்மனிடம், யாரும் தன்னை வெல்லாதிருக்க வரம் கேட்டவன், அந்த லிஸ்டில் பெண்ணைச் சேர்க்கவில்லை ஒரு பெண் தன்னை வெல்வதா என்ற ஆணவம்! பிறகு தன் வரத்தினால் தேவர்களையும், தேவேந்திரனையும் ஓட ஓட விரட்டினான். பராசக்தியான அம்பிகையைத் தவிர, வேறெவராலும் அவனை வீழ்த்த முடியாது என்று உணர்ந்த தேவர்கள், தேவியைத் தொழுதனர். சகல தெய்வங்களின் தேஜசும் ஆற்றலும் கொண்டு அம்பிகை வெளிப்பட, மும்மூர்த்திகளும் தேவர்களும் நமஸ்கரித்தனர். தம் ஆயுதங்களையும் சக்திகளையும் அம்பிகைக்குத் தந்தனர். பதினெட்டு கைகளிலும் ஆயுதங்கள். தரித்து சிம்மவாஹினி ஷேரோவாலி மா கர்ஜித்தாள். அந்த கர்ஜனையில் அசுரப்படையே கதிகலங்கியது. போரில் பலத்த சேதமும் அடைந்தது. மகிஷன் பல்வேறு வடிவங்கள் எடுத்து, ஒவ்வோர் இடத்திலிருந்தும் வெவ்வேறு ரூபங்களில் தோன்றி போரிட்டான். ஒரு கட்டத்தில் அன்னையின் வாகனமான சிங்கத்தின்மீது மகிஷாசுரன் தன் கதையால் அடிக்க, அன்னை பொறுமை இழந்தாள் மகிஷ ரூபம் எடுத்தபோது, தான் காளி ரூபம் எடுத்து சக்ராயுதத்தைப் பிரயோகித்தாள். உடல் வேறு, தலை வேறாக இரண்டாக மகிஷன் பிளவுபட்டான். ஆதி பராசக்தியால் வதைக்கப்பட்ட அவன் தலை, ஜகன்மாதாவின் பாதத்தில் வந்து வீழ்ந்தது. முன் ஜன்மத்தில் செய்த புண்ணியத்தால் அவன் முக்தி பெற்றான்.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar