Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எதிரிகள் தொல்லை நீங்க .. ... திருநள்ளார் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்! திருநள்ளார் கோவிலில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதேஸ்வரன் கோவில் குண்டம் விழா லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 மே
2013
10:05

அந்தியூர்: அந்தியூர் பர்கூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் கோவிலில், 12 ஆண்டுகளுக்குப் பிற நடந்த குண்டம் விழாவில், தமிழகம், கர்நாடகாத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அந்தியூர் அடுத்த பர்கூர் மலையில், மிகவும் பிரசித்தி பெற்ற, 800 ஆண்டுகள் பழமையான மாதேஸ்வரன் கோவில் குண்டம் திருவிழாவுக்கான பூச்சாட்டுதல், ஒரு மாதத்துக்கு முன் நடந்தது. குண்டம் விழாவின் சிறப்பு அம்சமாக, கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மாதேஸ்வரன், கொல்லேகால் கம்பாள சித்தேஸ்வரர், சுள்வாடி பிரம்மேஸ்வரர், நெல்லூர் சிவலிங்கேஸ்வரர், தேவர்மலை பஞ்சேஸ்வரர், சுண்டப்பூர் வீரபத்ரஸ்வாமி, தாமரைகரை வீரேஸ்வரர், சத்தி மாக்கம்பாளையம் பத்ரகாளியம்மன், மேட்டூர் தாலுகா, பாலவாடி சித்தேஸ்வரர் ஆகிய ஒன்பது ஸ்வாமிகள், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஒன்பது ஸ்வாமிகளுக்கு தேவ பூஜைகள், பஜனைகள் முடிந்து, நேற்று அதிகாலை, 5.30க்கு கல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு ஸ்வாமிகள் சார்பில், பூசாரிகள் பூக்குழியில் இறங்கினர். பூக்குழி இறங்குதலை காண, பர்கூர் மலை, 33 கிராமங்கள், மாதேஸ்வரன் மலை, 18 கிராமங்கள், ஆசனூர், 700 தட்டேபாகிலு கிராமங்களிலும், அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பர்கூர் கோவிலுக்கு பக்தர்கள் குவிவதற்கு, ஒன்பது சிவன் ஸ்வாமிகளுக்கும் ஒரே இடத்தில் பூக்குழி இறங்குதலே சிறப்பம்சம். குண்டம் நிகழ்ச்சியையடுத்து, காலை 8 மணியில் இருந்து, சிறப்பு பூஜைகள், பக்த தரிசன சேவை, மஞ்சள் நீராட்டு சேவை ஆகியன நடந்தன. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில், கோவிலுக்கு வந்து செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று ஒன்பது ஸ்வாமிகளுக்கும், சிறப்பு பூஜைகள் செய்து வழியனுப்பு விழா நடக்கிறது. பாதுகாப்பு கருதி அந்தியூர் சரகத்துக்குட்பட்ட, 50க்கும் மேற்பட்ட போலீஸார், ஊர் காவல்படை வீரர்கள், வனத்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar