Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேரடி விநாயகருக்கு சந்தனகாப்பு விழா புனித வியாகப்பர் ஆலயத்தில் 27ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்பொழி கோயிலில் தங்கத் தேரில்செப்பு தகடுகள் பொறுத்தும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2013
10:07

கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் தங்கத்தேரில் செப்புத்தகடுகள் பொறுத்தும் பணி நேற்று துவங்கியது. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தேரில் தங்கம் பதிக்கும் பணி நடக்கவுள்ளது.கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் உபயதாரர்கள் மூலமாக தங்கத் தேர் அமைக்கும் பணியும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோயில் வளாகத்தில் தேர் ஓடுவதற்காக ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே தங்க தேருக்கான மரத்தேர் தயார் நிலையில் இருந்து வரும் நிலையில் தங்கத் தேரை நிறுத்துவதற்கான இடமும் சுமார் 10லட்சம் செலவில் கட்டப்பட்டு அதற்கான பணிகளும் முடிவு பெற்றுள்ளது.இரண்டு கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று காலை தங்கத்தேருக்காக தயாரிக்கப்பட்டுள்ள மரத்தேரில் செப்புத்தகடுகள் பதிப்பதற்கான பணிகள் துவங்கியது. கோயில் உதவி ஆணையர் கார்த்தி, முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம் ஆகியோர் முன்னிலையில் இதற்கான பணிகள் பூஜைகளுடன் துவங்கியது. நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம் ரவிச்சந்திரராஜா, பரமேஸ்வரி அருணாசலம், தென்காசி கிட்டுபிள்ளை, ஆறுமுகம், கொடிக்குறிச்சி பரமசிவன் மற்றும் கோயில் பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.இப்பணிகள் குறித்து தங்கத் தேர் கமிட்டி தலைவரும், முன்னாள் திருப்பணிக்குழு தலைவருமான அருணாசலம் கூறுகையில்:-பக்தர்களின் எதிர்பார்ப்பினை தொடர்ந்து பண்பொழி கோயில் தங்கத் தேர் விரைவில் ஓடுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தேரை நிறுத்தும் இடம் கட்டுமான பணி முடிந்துள்ள நிலையில் ஓடுதள பணிகளும் பெருமளவில் முடிவுற்று வருகிறது. இதனையடுத்து தற்போது மரத்தேரில் செப்புத்தகடுகள் பதிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பணியாக ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தேரில் தங்கம் சேர்க்கும் பணி துவங்கப்படுமென தெரிவித்தாõர்.தென்மாவட்ட பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ள பண்பொழி கோயில் தங்கதேர் ஓடுவதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar