Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறநிலையத்துறை அதிகாரிகள் ... சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா கோலாகலம் சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தரிசனக்கட்டணம் வசூலிப்பதை எதிர்த்த வழக்கு திருவிழா காலங்களில் கூடுதல் வசூல்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஆக
2013
12:08

தமிழகத்தில், தரிசன கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரிய வழக்கில், அவ்வாறு வசூலிக்கும் 199 கோயில்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சிவகங்கை, கண்டனூர் வக்கீல் அருண் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பழமையான 33 ஆயிரம் கோயில்கள் உள்ளன. கட்டணம் செலுத்துபவர்களை சுவாமி சிலை அருகில் நின்று, வழிபட அனுமதிக்கின்றனர். மற்றவர்களை தூரத்தில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். கோயில்களை ஏ, பி,சி என அறநிலையத்துறை வகைப்படுத்தி உள்ளது. "ஏ பிரிவு கோயில்களுக்குச் சொந்தமாக காலி இடம், தரிசு நிலம், கட்டடங்கள், கடைகள், விடுதிகள், கோயில்களில் 51 தங்க ரதங்கள், 38 வெள்ளி ரதங்கள், மரத்தில் செய்யப்பட்ட 989 ரதங்கள் உள்ளன.கோயில்களை புனரமைக்க, நன்கொடைகள் உட்பட பல்வேறு வகைககளில், வருமானம் வருகிறது. "தங்க அட்டை திட்டம் மூலம் 5 லட்சம் ரூபாய் செலுத்தினால், 20 ஆண்டுகள் தரிசனம் செய்யலாம். அனைத்து கோயில்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு, 10 முதல் 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். திருவிழா காலங்களில், கூடுதலாக வசூலிக்கின்றனர். அர்ச்சனை, அபிஷேகம், தேர் இழுக்க 100 முதல் 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றனர். தரிசனக் கட்டணம் வசூலிக்கும் முறையை, ரத்து செய்ய உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன்: தமிழகத்தில் 36 ஆயிரத்து 546 கோயில்கள், அறநிலையத்துறை கண்காணிப்பில் உள்ளன. 235 கோயில்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. 199 கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோயில்களில், ஒரு கால பூஜை நடக்கிறது.  ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், மின் கட்டணம் செலுத்துதல், இதர செலவுகளுக்கு வருவாயை பெருக்க வேண்டியுள்ளது. சிலர்  வந்ததும், உடனே செல்ல  வேண்டும் என்கின்றனர். அவர்களிடம் சேவை கட்டணம் வசூலிக்கப் படுகிறது, என்றார். நீதிபதிகள், "199 கோயில்களையும் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும். விசாரணை ஆக.,13 க்கு தள்ளி வைக்கப்படு கிறது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar