Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமூர்த்திமலையில் ஆடி அமாவாசை ... ஆடி அமாவாசையில் 108 மூலிகைகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை வீரராகவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2013
11:08

திருவள்ளூர் : ஆடி அமாவாசையை ஒட்டி, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் வீரராகவர் கோவில், அகோபிலமட ஆதீன பரம்பரை, ஜீயர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வீரராகவ பெருமாள் சாலிகோத்ர மகரிஷிக்கு செய்து கொடுத்த பிரமாணத்தின்படி, அமாவாசை தினத்தன்று, வீரராகவரை தரிசித்தால், கஷ்டங்கள் நீங்கும் என்றும், அதேபோல், ஹிருத்தாபநாசினி குளத்தில் நீராடி, வீரராகவரை தரிசனம் செய்தால், நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக இருப்பர் என்பதும் ஐதீகம். இதையொட்டி, ஒவ்வொரு அமாவாசையன்றும் பிற மாநிலத்தில் இருந்தும், சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் முதல் நாள் இரவே கோவிலில் வந்து தங்கி, மறுநாள் குளத்தில் நீராடி, வீரராகவரை தரிசித்து வருகின்றனர். இதன்படி, ஆடி அமாவாசையான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து, தங்கள் நேர்த்திக் கடனை செய்தனர். மேலும், இறந்த முன்னோர்களுக்கு குளக்கரையில் திதி கொடுப்பதும் நடைபெற்றது.
ஆடிப்பூர விழா: ஆடிப்பூர விழாவை ஒட்டி, நான்கு நாட்களாக, வீரராகவர் கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னிதியில் சிறப்பு பூஜையும், மாடவீதியில் புறப்பாடும் நடைபெற்றது. வரும், 9ம் தேதி, ஆண்டாளுக்கு திருமஞ்சனமும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதேபோல், தேரடி தீர்த்தீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்பாள் திரிபுரசுந்தரிக்கு, காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலையில், சந்தனக்காப்பு அலங்காரமும், வளையல்களால் அலங்காரமும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar