Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேர் ரமலான் சிந்தனைகள் 29 ரமலான் சிந்தனைகள் 29
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கிருத்திகை விழா திருத்தணி கோவில் உண்டியல் வசூல் ரூ.1.36 கோடி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஆக
2013
10:08

திருத்தணி :திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவில், பக்தர்கள், தங்களது நேர்த்திக் கடனாக 1.36 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 479 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி பொருட்களை செலுத்திஉள்ளனர். திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, கடந்த மாதம், 29ம் தேதி முதல் இம்மாதம், 2ம் தேதி வரை நடந்தது. இதில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை வழிபட்டனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மலைக் கோவில் வளாகத்தில் வைக்கப் பட்டிருந்த உண்டியல்களில் ரொக்கம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். 479 கிராம் தங்கம் நேற்று முன்தினம் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) திருமகள் ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் அளித்த காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர், 150க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்களைக் கொண்டு வள்ளி மண்டபத்தில் ரொக்கம், தங்கம், வெள்ளி, தகடு என, தனித்தனியாக பிரித்து எண்ணப்பட்டது. இதில், ரொக்கம், 1.36 கோடி ரூபாய், 479 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி, ஒன்பது கிலோ பித்தளை, 30 கிலோ சின்தகடு போன்ற பொருட்கள் மூலம் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. ஆந்திரா "பந்த் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களில், 40 சதவீதம் பேர், ஆந்திராவில் இருந்து வந்து முருகப் பெருமானை வழிபட்டு செல்வர். அங்கு தெலுங்கானா பிரச்னையால், கடந்த மாதம், 31ம் தேதி காலை முதல், "பந்த் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப் பட்டது. இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்துக் கொண்டு வரவில்லை. இதனால், உண்டியல் வசூல் குறையும் என, பக்தர்கள் மத்தியில் கருத்து நிலவியது. ஆனால், ஆந்திரா பக்தர்கள் வரவில்லை என்றாலும், இந்தாண்டு, 13 லட்சம் ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழாவில் 8ம் நாளான இன்று மதியம் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லுரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை; பூங்கா நகர், தங்க சாலை தெருவில் உள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் மஹா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar