Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழங்கால குகை ஓவியங்கள் செஞ்சி அருகே ... இளநீர், தேங்காய்களால் உருவான விநாயகர் சிலை! இளநீர், தேங்காய்களால் உருவான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: பிள்ளையாருக்கு மெகா சைஸ் கொழுக்கட்டை படையல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
10:09

மதுரை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு, 60 கிலோ எடையில் கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

Default Image
Next News

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு, 150 கிலோ எடையில், மெகா சைஸ் கொழுக்கட்டை படைக்கப்பட்டது. திருச்சியில், பொதுமக்கள் நேற்று, விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடினர். பெரியக்கடை வீதி, என்.எஸ்.பி., ரோடு, பீமநகர், உறையூர், தென்னூர் போன்ற பகுதிகளில், ஏராளமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. பல இடங்களில், களிமண்ணை அச்சில் வார்த்து, உடனடியாக விநாயகர் சிலைகள் தயாரித்து விற்கப்பட்டன. இதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். திருச்சி மாநகரில், 182, புறநகரில், 683 என, திருச்சி மாவட்டம் முழுவதும், 865 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் உள்ள உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, உச்சிப்பிள்ளையாருக்கு மெகா சைஸ் கொழுக்கட்டை படைக்கப்பட்டது. 150 கிலோ எடையில் மெகா சைஸ் கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு, அதை அர்ச்சகர்கள் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு, டோலி கட்டி தூக்கிச் சென்றனர். பாதி மாணிக்க விநாயகருக்கும், மீதம் உச்சிப்பிள்ளையாருக்கும் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உச்சிப்பிள்ளையாரையும், மாணிக்க விநாயகரையும் தரிசித்தனர். இரவு பால விநாயகர் அலங்காரத்தில், விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, தினமும் மாலை நாகா பரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, வல்லப கணபதி, குமார கணபதி, சித்தி புத்தி கணபதி, நடன கணபதி என, 13 நாட்கள் விநாயகர் பல்வேறு அலங்காரத்தில், இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar