Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கயிலாய திருக்காட்சி: 63 ... பஜனை பாடல்களுடன் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா! பஜனை பாடல்களுடன் கருட வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள் கோவில்களை காக்க புதிய திட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 செப்
2013
10:09

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில், சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு, 38,529 கோவில்கள் உள்ளன. சமீபகாலமாக கோவில்களில், திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, கோவில் பாதுகாப்புக்கு என, அமைக்கப்பட்ட கோவில் பாதுகாப்பு படையினரின் போதுமான ஆர்வமின்மையே என, பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவில்களில் உள்ள, உலோகத் திருமேனிகள், பொன், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், உண்டியல்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக, திருக்கோவில் பாதுகாப்பு படை என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதில், 1,000 இரண்டாம் நிலை காவலர்கள், 3,000 முன்னாள் ராணுவ படைவீரர்கள் ஆகியோரை நியமனம் செய்ய, அரசு அனுமதி அளித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், பாதுகாப்பு படையினரின எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. இதனால்,கோவில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், 1,500லிருந்து, 5 ஆயிரமாக, கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. இருப்பினும், முன்னாள் ராணுவ வீரர்கள், கோவில் பாதுகாப்பு படையில் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை.இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக, அந்தந்த மண்டல இணை ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களோடு சேர்ந்து, மாவட்டத்தில் உள்ள, கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த செயல் அலுவலர்களிடம், கோவில் உடைமைகளை பாதுகாப்பதற்கான, திட்டங்களில் ஈடுபட, வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar