Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மீனாட்சி அம்மன் கொலு.. அலைமோதும் ... நவராத்திரி ஏழாம் நாள் (அக்.11) வழிபாடு! நவராத்திரி ஏழாம் நாள் (அக்.11) வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழாவுக்கு தயாராகும் காளி சிலைகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 அக்
2013
10:10

கோவை: கோயமுத்தூர் பெங்காளி சமாஜ் சார்பில், நவராத்திரி விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக, காளி சிலைகள் தயாரித்து, பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை போலவே, நவராத்திரி விழாவும் கோவையில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. கோவை பெங்காளி சமாஜத்தினர், கோவையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் 11 அடி உயரம் நான்கு அடி அகலத்தில் பிரமாண்டமான காளி சிலையை, தயாரிக்கின்றனர். அதே போல் விநாயகர், முருகர், மகாலட்சுமி, சரஸ்வதி சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன. இவையனைத்தும், சுற்றுச்சூழல், நீர்நிலைகள் மாசடையாத வகையில் தயாரிக்கப்படுகின்றன. பிரமாண்டமான சிலைகள் தயாரிப்புப்பணியில் மேற்குவங்க கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலை அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும். அக்., 11ம் தேதி சிலைகள் சுகுணா திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. 14ம் தேதி வரை, தினமும் நைவேத்தியம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், இசை, நடனம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. விழா நிறைவடைந்து மூன்று நாட்களுக்குப் பின், நான்கு சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. பெங்காளி சமாஜத்தை சேர்ந்த சந்தன் கூறுகையில், ""மேற்குவங்கத்தில் துர்கா அம்மா ( காளிதேவி) பிரசித்தி பெற்ற கடவுள். நவராத்திரி விழாவில் கடைசி நான்கு நாட்கள் காளிதேவியை பிரதிஷ்டை செய்து மக்கள் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ""அந்த நடைமுறையை கோவையிலும் பின்பற்றுகிறோம். இதற்காக, மேற்கு வங்கக் கலைஞர்களை வரவழைத்து சிலைகளை செய்கிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: கோழியூர் சவுந்திர நாயகி உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், நேற்று ஒரே நாளில் 120 திருமணங்களால் நடந்ததால் ... மேலும்
 
temple news
வால்பாறை: நடுமலை எஸ்டேட் பூமாரியம்மன் கோவிலில், முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக ... மேலும்
 
temple news
வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.உடுமலை மாரியம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar